Wednesday, July 27, 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01

விறல்வேல் வீரனே , "எங்கே நம் வானவல்லி? சித்திரைக்கேனும் வந்துவிடுமா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த "வானவல்லி" இதோ வாசகர்களின் கைகளில்.... 

சரித்திர நாவல் என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இதனை எழுதி முடிக்க கல்கிக்கு ஆறு வருடங்கள் ஆனது. ஆனால் இரண்டே வருடங்களில் முழு வீச்சில் வானவல்லி எழுதப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. 

பொன்னியின் செல்வன் அளித்த உற்சாகத்தை வானவல்லியிலும் எதிர்பார்க்கிறேன். எத்தனையோ வரலாற்றுப் புதினங்களை வாசித்திருந்தாலும் பொன்னியின் செல்வனைப் போல் எதுவும் என்னை ஈர்த்ததில்லை. 

வானவல்லி என்னை மட்டுமின்றி எல்லோரையும் கவரும் என நம்புகிறேன். அடுத்து நீ எழுதும் புதினத்தை கணினியில் தட்டச்சு செய்யும் சமநேரத்தில் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் அல்லது ஏதேனும் நாளிதழ் / சஞ்சிகையில் வெளியிட ஆவண  செய்ய வேண்டுகிறேன்.                        


விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01 
https://sigarambharathi.blogspot.com/2016/11/viralvel-veeranukkor-madal-01.html