Friday, September 12, 2014

கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். 

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. 

கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை, ”பைத்தியங்கள் உலவப்போகின்றன!” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல். 


கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு 
https://manaththooralgal.blogspot.com/2014/09/kavidhai-ulagin-sooriyan-bhaarathi-ninaivu-naal-sirappup-pagirvu.html

Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்! 
https://manaththooralgal.blogspot.com/2014/08/thindukkal-ai-liyoniyin-nermugam.html

Friday, August 01, 2014

சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான்

முன்னைய பதிவு : அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

நன்றி : நக்கீரன் 
               01.09.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 02 

 சிறகுகளில்லாத பறவை  - கவிக்கோ அப்துல் ரகுமான் 


சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/08/siragugalillaadha-paravai-kavikko-abdhul-rahuman.html

Tuesday, July 29, 2014

கடிகாரம்

மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய்... 


கடிகாரம் 
https://skaveetha.blogspot.com/2014/07/kadigaaram.html

Wednesday, July 23, 2014

மூடாத செவிகள்

செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன்... 


மூடாத செவிகள் 
https://skaveetha.blogspot.com/2014/07/moodaatha-sevigal.html

Sunday, July 13, 2014

அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி : நக்கீரன் 
               01.08.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 01
அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 


அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/azhage-aandavan-kavikko-abdul-rahumaan.html

Sunday, July 06, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி

கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். 

இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. 

கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. 


அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி 
https://manaththooralgal.blogspot.com/2014/07/ariyaadha-vayadhin-adhirchchigal-kaviyarasu-vairamuththuvin-naruk-petti.html

Friday, July 04, 2014

பிரிவு

கனாக் கண்டேனடி 
உனைப்போல் 
ஒரு 
நண்பியும் 
நட்பும்...


பிரிவு 
https://skaveetha.blogspot.com/2014/07/pirivu.html

Thursday, July 03, 2014

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியிருந்தது. 

அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற்றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை. 

இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தியானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.


தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/thi.gnanasekaranin-paarvaiyil-thelivaththai-joseph.html

Tuesday, July 01, 2014

பேசத் தொடங்கிவிட்டோம்

பேசத் தொடங்கிவிட்டோம்
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்

வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்


பேசத் தொடங்கிவிட்டோம் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/pesath-thodangivittom.html

Saturday, June 21, 2014

தவறிய அழைப்பு

தருவாயா ஒரு முறை 
என் கோபமெனும் தவறால் 
தவறிப்போன... 


தவறிய அழைப்பு 
https://skaveetha.blogspot.com/2014/06/thavariya-azhaippu.html

Tuesday, June 17, 2014

நான்

என் அன்னை கருவறையில் 
கவிதையொன்று 
சுமந்தாச்சு 
அதுவே இன்று 
'கவீதா'
என்று ஆயாச்சு 
கருவறையில் நான் 
விட்ட முதல் மூச்சு 
கவிதான் 
முட்டிமோதி வெளியில் வந்து... 


நான் 
https://skaveetha.blogspot.com/2014/06/naan.html

Thursday, June 12, 2014

காணாமல் போதல்

அடர்ந்த காடுகளைப் 
பார்க்கும்போதெல்லாம்... 


காணாமல் போதல் 
https://manaththooralgal.blogspot.com/2014/06/kaanaamal-podhal.html

Friday, June 06, 2014

கோபம்

* எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றி கொண்டவன் ஆகிறான்.

* கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில் நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்தில் இருந்து தப்பி விடுவாய்.


கோபம் 
https://manaththooralgal.blogspot.com/2014/06/KOBAM.html

Thursday, June 05, 2014

காத்திருப்பு

என் இதயம் 
அழுவது
காத்திருந்து கால்கள்
வலிப்பதனால் அல்ல...


காத்திருப்பு 
https://skaveetha.blogspot.com/2014/06/kaaththiruppu.html

Sunday, June 01, 2014

அகவை ஒன்பதில் சிகரம்!

பாடசாலைக் காலத்தின் பின் இது மிகக் கடினமான பணியானது. 2009 ஆகஸ்ட்டில் எனது பாடசாலைக் காலம் நிறைவடைந்தது. நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து வந்த மாணவர்கள் எங்கள் வகுப்பில் / தரத்தில் கல்வி கற்றனர். 

அவ்வாறான சுமார் 100 வாசகர்களே "சிகரம்"  கையெழுத்து சஞ்சிகையின் வாசகர்களாக இருந்து வந்தனர். பாடசாலைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்களில் முக்கால் வாசிப்பேர் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்விட்டனர். 

ஆகவே எனது ஊரை அண்டிய - மிகக் கிட்டிய பிரதேச நண்பர்களையே எனது வாசகர்களாக்கிக் கொள்ள நேர்ந்தது. ஒரு பத்துப் பதினைந்து பேரளவில் தான் இருக்கும்.


அகவை ஒன்பதில் சிகரம்! 
https://sigaram3.blogspot.com/2014/05/agavai-onbadhil-sigaram.html

Friday, May 30, 2014

இடம் வேண்டும் !

இடம் வேண்டும் ! 

என் 
மரணத்தின் 
பின்னாவது - உன் 
மனமெனும் 
சுவர்க்கத்தில்... 


இடம் வேண்டும் ! 
https://skaveetha.blogspot.com/2014/05/idam-vendum.html

Thursday, May 29, 2014

சூழ்நிலைகளும் மனிதர்களும்!

'தங்களது சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால் தங்களை - தங்கள் எண்ணங்களை - மேம்படுத்திக் கொள்ள அவர்கள் முனைவதில்லை; அக்கறை செலுத்துவதில்லை. ஆதலால் சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்.


சூழ்நிலைகளும் மனிதர்களும்! 
https://manaththooralgal.blogspot.com/2014/05/soolnilaigalum-manidhargalum.html

Tuesday, May 27, 2014

நேசம்

நம் பிரிவின்  வலி
என் பேனைக்குக்  கூட
பொறுக்கவில்லை...