Wednesday, July 27, 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01

விறல்வேல் வீரனே , "எங்கே நம் வானவல்லி? சித்திரைக்கேனும் வந்துவிடுமா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த "வானவல்லி" இதோ வாசகர்களின் கைகளில்.... 

சரித்திர நாவல் என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இதனை எழுதி முடிக்க கல்கிக்கு ஆறு வருடங்கள் ஆனது. ஆனால் இரண்டே வருடங்களில் முழு வீச்சில் வானவல்லி எழுதப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. 

பொன்னியின் செல்வன் அளித்த உற்சாகத்தை வானவல்லியிலும் எதிர்பார்க்கிறேன். எத்தனையோ வரலாற்றுப் புதினங்களை வாசித்திருந்தாலும் பொன்னியின் செல்வனைப் போல் எதுவும் என்னை ஈர்த்ததில்லை. 

வானவல்லி என்னை மட்டுமின்றி எல்லோரையும் கவரும் என நம்புகிறேன். அடுத்து நீ எழுதும் புதினத்தை கணினியில் தட்டச்சு செய்யும் சமநேரத்தில் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் அல்லது ஏதேனும் நாளிதழ் / சஞ்சிகையில் வெளியிட ஆவண  செய்ய வேண்டுகிறேன்.                        


விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01 
https://sigarambharathi.blogspot.com/2016/11/viralvel-veeranukkor-madal-01.html

Friday, September 12, 2014

கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். 

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. 

கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை, ”பைத்தியங்கள் உலவப்போகின்றன!” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல். 


கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு 
https://manaththooralgal.blogspot.com/2014/09/kavidhai-ulagin-sooriyan-bhaarathi-ninaivu-naal-sirappup-pagirvu.html

Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்! 
https://manaththooralgal.blogspot.com/2014/08/thindukkal-ai-liyoniyin-nermugam.html

Friday, August 01, 2014

சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான்

முன்னைய பதிவு : அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

நன்றி : நக்கீரன் 
               01.09.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 02 

 சிறகுகளில்லாத பறவை  - கவிக்கோ அப்துல் ரகுமான் 


சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/08/siragugalillaadha-paravai-kavikko-abdhul-rahuman.html

Tuesday, July 29, 2014

கடிகாரம்

மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய்... 


கடிகாரம் 
https://skaveetha.blogspot.com/2014/07/kadigaaram.html

Wednesday, July 23, 2014

மூடாத செவிகள்

செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன்... 


மூடாத செவிகள் 
https://skaveetha.blogspot.com/2014/07/moodaatha-sevigal.html

Sunday, July 13, 2014

அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி : நக்கீரன் 
               01.08.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 01
அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 


அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/azhage-aandavan-kavikko-abdul-rahumaan.html

Sunday, July 06, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி

கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். 

இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. 

கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. 


அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி 
https://manaththooralgal.blogspot.com/2014/07/ariyaadha-vayadhin-adhirchchigal-kaviyarasu-vairamuththuvin-naruk-petti.html

Friday, July 04, 2014

பிரிவு

கனாக் கண்டேனடி 
உனைப்போல் 
ஒரு 
நண்பியும் 
நட்பும்...


பிரிவு 
https://skaveetha.blogspot.com/2014/07/pirivu.html

Thursday, July 03, 2014

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியிருந்தது. 

அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற்றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை. 

இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தியானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.


தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/thi.gnanasekaranin-paarvaiyil-thelivaththai-joseph.html