ஒரு நாள் அவளா கூப்பிட்டு "அருண் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். அம்மா உன்னை கூட்டிட்டு கோயில் போயிட்டு வர சொன்னாங்க" என்றதும் மின்னலை விட வேகமாய் அவள் முன் தோன்றினேன்.
அவளோட விருப்பத்திற்கு கோயில் அப்புறம் என்னோட விருப்பத்திற்கு ஹோட்டல்ன்னு சுத்திட்டு நைட் ரூம்க்கு கூட்டிட்டு போய்விட்டேன். நாளுக்கு நாள் அவளை ஞாயிற்றுகிழமைகளில் வரவழைத்து தியேட்டர், பீச்சுன்னு போயிட்டு வந்தோம். இப்பவெல்லாம் அம்மாவின் அனுமதி தேவைப்படாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்குள் காதல் படர்வதை இருவரும் உணர்ந்தோம்.
எதிர்ப்பாராத தீண்டுதல்களில் விலகினோம். அடுத்த தீண்டலுக்காக காத்திருந்தோம். காதலை சொல்ல காதலர் தினத்தை பயன்படுத்தி கொண்டோம். தயக்கமே இல்லாமல் காதல் மலர்ந்தது. உரிமை கூடியது. சுதந்திர காதலை சுவாசித்தோம்.
அவளும் நானும் | சிறுகதை | கதிரவன்
https://sigaram-one.blogspot.com/2018/09/avalum-naanum.html
#தமிழ் #சிறுகதை #குடும்பம் #திருமணம் #காதல் #அன்பு #பிரிவு #உறவுகள் #உணர்வுகள் #சொந்தம் #இல்லறம் #மகிழ்ச்சி #சிகரம்
No comments:
Post a Comment